15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்பமாக்கிய இளைஞன் கைது..!
[2024-06-12 10:20:42] Views:[10]
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி கர்பமாக்கிய குற்றச்சாட்டில் 24 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவியான 15 வயதுடைய குறித்த சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞன் சிறுமியுடன் யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தனது உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்ற பின்னர் சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சிறுமியினை கூட்டிவந்துள்ளார்.
சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுமியின் கணவரான குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










