மாணவிகளுடன் தவறாக நடந்த ஆசிரியர் கைது..!
[2024-05-27 17:27:50] Views:[10]
யாழில். பாடசாலை மாணவிகளுடன் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தரம் 5 இல் கல்வி கற்கும் 10 வயதான மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, ஆசிரியரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை குறித்த ஆசிரியரினால், மேலும் சில மாணவிகளும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










