எல்லா மக்களும் சமம்: அதுவே புத்தரின் போதனை
[2024-05-24 13:09:54] Views:[15]
இலங்கை வாழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். புத்ததர்மத்தில் 'எல்லா மக்களும் சமம்' என்பதையே புத்த பெருமானின் போதனை உணர்த்துகின்றது என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு நேற்று (23) வியாழக்கிழமை யாழ். மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது விகாராதிபதி ஸ்ரீ விமலதேரர் மேலும் தெரிவிக்கையில்: உலகத்தின் அனைத்து மக்களினதும் கௌரவம், பாதுகாப்பு, உரிமை என்ப வற்றை மையமாகக் கொண்டதே புத்த பெருமானின் தர்ம போதனை. இது உலகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் சாந்தி, சமாதானம் நல்லிணக்கத்தைப் போதிக்கின்றது என தெரிவித்தார்.










