இந்திய விமான நிலையத்தில் வைத்து ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் கைது!
[2024-05-21 14:26:24] Views:[10]
இந்தியா - குஜராத் விமான நிலையத்தில் வைத்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்ட 4 இலங்கையர்களை அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அகமதாபாத்திற்கு வந்த நோக்கத்தை கண்டறியும் வகையில் இந்திய காவல்துறையினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேநபர்கள் திட்டமிட்ட இலக்கை அடைவதற்கு முன்பே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நால்வரும் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அகமதாபாத் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதானவர்களின் பின்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் வலையமைப்புடனான தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவினர் இந்தியாவின் அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கூடுதல் தகவல்களை கோரியுள்ளனர்.
இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










