யாழ். பக்தர்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மனை தர்சிக்க சென்ற பேருந்து விபத்து!
[2024-05-21 12:32:50] Views:[11]
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பக்தர்களின் வந்த பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குத்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் பயணித்த பேருந்து பூநகரி பாலம் தாண்டி வந்துகொண்டிருந்த போது தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










