ஈரான் ஜனாதிபதி மறைவு ! இரங்கலை தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர்:
[2024-05-21 06:23:24] Views:[10]
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் "இந்த துரதிர்ஷ்டவசமான மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளதாக" அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானின் புதிய துணை ஜனாதிபதிக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அனுப்பிய செய்தியில் குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.










