ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது 400 பட்டதாரிகளுக்கு நியமனம்!
[2024-05-20 13:45:58] Views:[10]
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுளள்ளது.
உயர்தர வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது.
நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










