காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் நாளை முதல் ஆரம்பம்..!
[2024-05-16 11:54:34] Views:[11]
இலங்கையின் காங்கேசன்துறையிலிருந்து தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் வரையான கப்பல் சேவையை மீண்டும் நாளை முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் சில சட்டரீதியான அனுமதிகள் பெற வேண்டிய காரணத்தினால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பயணத்தை மேற்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொண்ட பயணிகள் நாளை அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அந்நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.










