யாழில் குழந்தையை பிரசவித்த பாடசாலை சிறுமி
[2024-05-11 11:34:57] Views:[10]
பாடசாலை சிறுமி ஒருவர் குழந்தையை பிரசவித்து குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (10) மாலை வடமராட்சி துன்னாலைப் பிரதேசத்தை சேர்ந்ததாக தெரிவித்து கொண்டு தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.










