இன்று முதல் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு
[2024-05-10 21:38:50] Views:[13]
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
குறித்த நேர்முகத்தேர்வு இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேர்முகத் தேர்வுகள் 10,11,13 மற்றும் 20ஆம் திகதிகளில் பத்தரமுல்லையில் உள்ள பொருளாதார கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளன. இந்த ஆட்சேர்ப்புகள் 2021 டிசம்பர் 12 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் முடிவுகளின்படி செய்யப்படுகின்றன.
தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.govlk இல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(c) இல் டிப்ளோமா பெற்றவர்களை சேர்த்து கொள்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










