யாழில் சட்டவிரோதமாக இயங்கிய கொல்கலன் சுற்றிவளைப்பு! இறைச்சியுடன் ஒருவர் கைது:
[2024-05-05 10:46:41] Views:[10]
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டுவந்த கொள்கலன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சியுன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி வீதியில் உள்ள பாலடைந்த கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு, ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவல்களை அடுத்து, குறித்த இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.
அதன்போது அக்கட்டடத்தில் இறைச்சியாக்கிக் கொண்டிருந்த நபரை கைது செய்ததுடன், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டிருந்த 21 மாடுகள் மற்றும் 04 ஆடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், ஒரு தொகை இறைச்சி மற்றும் இறைச்சியாக்க பயன்படுத்திய கோடாரி , கத்திகள் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










