யாழில் நடைபெறும் சர்வதேச சிலம்பப்போட்டி..!
[2024-05-04 15:53:39] Views:[11]
ஐந்து நாடுகள் பங்குபெறும் சர்வதேச சிலம்பம் போட்டியானது இன்றையதினம் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியது.
சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இந் நிகழ்வு, இலங்கை சிவலீமன் சங்கத்தின் தலைவரும் உலக சிவலீமன் சங்கத்தின் இலங்கைத் தலைவருமான யசோதரன் தலைமையில் போட்டி நிகழ்சிகள் ஆரம்பமானது.
இலங்கை, இந்தியா, லண்டன், மலேஷியா, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் போட்டியிட்டு வருகின்றனர்.
சிலம்பம் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










