சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது! படகுகளும் கைப்பற்றப்பட்டன:
[2024-05-03 09:58:53] Views:[10]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று (02) வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது அவர்கள் பயன்படுத்திய மூன்று படகுகள், வலைகள் உட்பட பல உடமைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒளி பாய்ச்சி சுருக்குவலை வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கட்டைக்காட்டை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக அவர்களை உடமைகளுடன் யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.










