இம்மாத இறுதி வாரத்தில் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்:
[2024-05-02 11:10:58] Views:[11]
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் மொத்தம் 346976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இதேவேளை சாதாரண தரப் பரீட்சை மே மாதம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய 452979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










