பிரதான நகர வீதி சமிக்ஞைகளில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம்!
[2024-05-01 11:06:54] Views:[9]
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி சமிக்ஞைகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.










