குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை - மூவர் கைது
[2024-04-27 16:16:27] Views:[13]
கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், அவரின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றதனை தொடர்ந்து, இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்த பின்னர் விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளனர்.
நகைகடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதுடன் பறித்து செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள வேளை, இரண்டு பென்ரன் மற்றும் லப்டொப் என்பனவும் சந்தேகநபர்களிடமிருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபர்கள் மூவரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.










