எட்டு வயது சிறுவன் உட்பட மூவர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!
[2024-04-22 16:57:25] Views:[9]
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 03 பேர் அகதிகளாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகு மூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 03 பேர் நேற்று இரவு சுமார் 11.00 மணியில் பூநகரி கடற்கரையில் இருந்து பைப்பர் படகில் புறப்பட்டு இன்றையதினம் (22) காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை ஐந்தாவது மணற்பரப்பில் தரையிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த இராமேஸ்வரம் மரைன் பொலிஸார், மூவரையும் மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










