தபால் திணைக்களத்தால் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்...!
[2024-04-18 10:50:55] Views:[9]
குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தபால் திணைக்களத்தினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதிகள் சம்பந்தமாக எவ்வித குறுஞ்செய்திகளும் அனுப்ப பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்கள அதிகாரபூர்வ இணைய தளத்தைப் போன்று போலியான இணைய தளமொன்று உருவாக்கப்பட்டு, நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு 0112542104, 0112 334728, 0112335978, 0112687229, 0112330072 போன்ற எண்களின் மூலம் தொடர்பு கொண்டு உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










