தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ் நல்லூரில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட கண்காட்சி...!
[2024-04-13 09:19:39] Views:[13]
யாழ். மாவட்ட உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களின் கண்காட்சி நேற்று முன்தினம் 11ம் திகதி ஆரம்பமாகிய நிலையில 13ம் திகதிவரை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 07.00 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலைக்கருகில் உள்ள கிட்டு பூங்காவில் இடம்பெற்றவுள்ளது.
யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பங்கேற்றுள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் தங்களது உணவு உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், காலணிகள், தைத்த ஆடைகள், பெண்களுக்கான கைப்பைகள், பூங்கன்றுகள் என பல்வேறு உற்பத்திகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.










