அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த தமிழ் அரசியல்வாதி!
[2024-04-09 11:43:17] Views:[9]
நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்பு அரசியலில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் உள்நுழைந்த
நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இயன்றவரை உயர்த்துவதே எனவும் அதற்காக இயன்றளவு சேவைகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வயோதிபமாக உள்ளதால், உடல் பலவீனமாக இருப்பதாக கருதுவதால், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.










