அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
[2024-04-08 11:25:13] Views:[10]
அரசாங்க ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் (08) முதல் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் நேற்றைய தினம் (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை "உயர்த்தப்பட்ட 10,000/= ரூபாவுடன், நாளை 08 ஆம் திகதி முதல் நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும்.
மேலும் நாட்டில் உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் தலா 10kg அரிசி வழங்கப்பட உள்ளதாகவும், அவை உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.










