கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட நலன்புரி கொடுப்பனவு!
[2024-04-08 11:21:17] Views:[16]
பிரசவ காலத்தின் போது தொழில் வழங்குநர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் விசேட பிரசவகால கொடுப்பனவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முறைசாரா தொழிற்றுறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் உட்பட தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் சீரான முறையில் பணியை தொடரும் வகையில் புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.










