புதிதாக தொலைபேசி வாங்குபவர்களுக்கு இனிய செய்தி.
[2024-04-05 22:25:40] Views:[11]
நாட்டில் டொலரின் பெறுமதியானது வீழ்ச்சி அடைந்த காரணத்தால் கையடக்க தொலைபேசிகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி,கையடக்க தொலைபேசிகளின் விலை 18%-20% வரை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனஅந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தற்போது டொலர் 300/= ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515 000/= முதல் 530 000/= ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375 000/= ரூபா வரை குறைவடைந்துள்ளது. அதேபோல், குறைந்த விலையுடைய கைப்பேசிகளின் விலையும் 18 முதல் 20 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது. 10,000/= ரூபா வரை அதிகரித்திருந்த கைப்பேசியை தற்போது 7000/= ரூபாக்கு பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.










