நீர்க்குழாய் மூலம் கசிப்பு விற்பனை! கைதான குடும்பஸ்தர்.
[2024-03-30 21:00:33] Views:[9]
முள்ளியவளை பிரதேசத்தில் வீட்டு காணி ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து குழாய் மூலமாக விநியோகித்த சந்தேக நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் முள்ளியவளை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தி செய்து நீர் குழாய் மூலம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற பொலிஸார் குழாய் அமைப்பு ஒன்றையும் மற்றும் அதற்கு கீழே நிலத்தில் புதைக்கப்பட்ட கசிப்பும் கண்டறியப்பட்டுள்ளதுடன், இரு பெரல் கோடா இதன்போது மீட்கப்பட்டுள்ளது. பொருட்களையும் சந்தேக நபரையும் இன்று சனிக்கிழமை மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.










