யாழ்.பலாலி ஊடான சென்னை விமான சேவையில் கொண்டு வரப்படவுள்ள புதிய அம்சம்கள்.
[2024-03-13 20:53:45] Views:[10]
சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடல் நேற்று(12) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான வட மாகாண ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல் தொடர்பில் இங்கு கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பொதுமக்களுக்கான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.மேலும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிட தகுந்த விடயமாகும்.










