யாழ்ப்பாணத்தில் கடற்படையினரின் விசேட சுற்றிவலைப்பால் இருவர் கைது.
[2024-03-12 21:20:10] Views:[9]
யாழ்ப்பாணம்-வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் நேற்றையதினம் (2024-03-12) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு மீனவர்கள் பருத்தித்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாகவே பருத்தித்துறை கடற்படையினர் வடமராட்சி கிழக்கு மணல் காடு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த இருவரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் குடத்தனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும்,இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் யாழ் கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.










