யாழில் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்த நபர்களுக்கு தண்டப்பணம்
[2024-03-07 11:02:42] Views:[10]
யாழ்ப்பாணத்தில் காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர்களுக்கு 28000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி மற்றும் மீசாலை ஆகிய பிரேதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்போது , காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு நேற்று (05) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் இருவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான் ஒருவருக்கு 20000 ரூபாய் தண்டமும், மற்றைய நபருக்கு 8000 ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. அத்துடன் கைப்பற்றிய காலாவதியான குளிர்பானங்களை அழிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.










